Expanding Grid
Click on the boxes below:
தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வு!
குழந்தைகளுக்கு நோய் எதிர்பாற்றலைத் தரும் ராகி கூழ்!
தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கற்பூரவள்ளியின் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் உங்களுக்குத் தெரியாத சில கற்பூரவள்ளியின் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்துக்கள் 100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம்
கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன்
உள்ளது. மேலும் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின்
பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது. இப்போது கற்பூரவள்ளி இலைகளால் கிடைக்கும் ஆரோக்கிய
நன்மைகள் குறித்து காண்போம்.
நன்மை #1
கற்பூரவள்ளி இலைகளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால்,
உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை
குறையும்.
நன்மை #2
கற்பூரவள்ளியில் பலரும் அதிகம் எடுக்கத் தவிர்க்கும்
அத்தியாவசியமான வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் கே சத்தானது இதய
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின்
வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.
நன்மை #3
சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவள்ளியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்திருப்பதாக தெரிய
வந்துள்ளது. இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி,
முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.
நன்மை #4
கற்பூரவள்ளி இலைகளில் டயட்டரி நார்ச்சத்து ஏராளமான
அளவில் நிறைந்துள்ளது. இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள
கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
நன்மை #5
கற்பூரவள்ளி இலைகளில் உள்ள தைமோல் மற்றும்
கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல்
ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.
நன்மை #6
காய்ச்சல், சளி மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றால்
அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று திண்பது நல்லது.
இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.
நன்மை #7
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி
இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது இரத்த
அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
நன்மை #8
நெஞ்சு சளியில் இருந்து கற்பூரவள்ளி எண்ணெய் விரைவில்
நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான நீரில் 3 துளிகள் கற்பூரவள்ளி
எண்ணெயை சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இப்படி 4-5 நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல பலன்
கிடைக்கும்.
நன்மை #9
கற்பூரவள்ளி இலையில் மக்னீசியம் மற்றும் கால்கியம் அதிகம்
உள்ளது. இது எலும்பு மெட்டபாலிசத்திற்கு மிகவும் முக்கியமான பொருட்களாகும். எனவே உங்கள் எலும்பு
ஆரோக்கியமாக பிரச்சனைகளின்றி இருக்க வேண்டுமானால், கற்பூரவள்ளி இலையை அன்றாடம் சாப்பிடுங்கள்.
நன்மை #10
கற்பூரவள்ளி அஜீரண கோளாறுகளைத் தடுக்கும். அதுவும் இது
பித்த நீரின் உற்பத்தியைத் தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு
லேசான அஜீரண கோளாறு என்றால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால், ஜூஸ் அல்லது வெதுவெதுப்பான
நீரில் 2-3 துளிகள் கற்பூரவள்ளி எண்ணெயை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் செரிமானம் விரைவில்
மேம்படும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஜூலை 1 முதல் ஊதிய உயர்வு
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி காத்திருந்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஜூலை 1 முதல் 50 லட்சம் மத்திய ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது 17% என்ற விகிதத்தில் கிடைக்கிறது, இது இப்போது நேரடியாக 28% ஆக மாறும். சம்பள உயர்வு வடிவத்தில் இந்த அதிகரிப்பின் பயனை ஊழியர்கள் அடைவார்கள்.
நிலுவையில் உள்ள மூன்று தவணைகளும் கிடைக்கும்
இது தவிர, ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், நிலுவையில் உள்ள தவணைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். மத்திய ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ வழங்கப்படுகிறது. இது 28 சதவிகிதமாக அதிகரிக்கும். பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். ஊழியர்கள் இரண்டு ஆண்டுகால டி.ஏ.வின் பயனை நேரடியாகப் பெற உள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தது. இரண்டாம் பாதியில், அதாவது ஜூன் 2020-ல் இது 3 சதவிகிதம் அதிகரித்தது. இப்போது 2021 ஜனவரியில், அகவிலைப்படி மீண்டும் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது இது மொத்தம் 28 சதவீதமாகிவிட்டது. இருப்பினும், இந்த மூன்று தவணைகளும் இதுவரை செலுத்தப்படவில்லை.
குழந்தைகளுக்கு நோய் எதிர்பாற்றலைத் தரும் ராகி கூழ்
குழந்தைக்கு உணவை தொடங்கும் போது திரவ வகை
உணவை தான் முதலில் சேர்ப்போம். திட உணவையும் அதிக மென்மையாக்கி கொடுப்பதுதான் வழக்கம்.
பெரும்பாலும் குழந்தைக்கு கஞ்சி அல்லது கூழ் வகையறாக்களைத்தான் அதிகம் கொடுப்பது வழக்கம்.
கேழ்வரகை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் இந்த ராகி பவுடரின் சுவை குழந்தைகளோடு
பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதை வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் தயக்கமின்றி குழந்தைக்கு கொடுக்கலாம்
கேழ்வரகை சுத்தம் செய்து மண், கல் நீக்கி சுத்தம்
செய்துகொள்ளவும். பிறகு ராகி மூழ்கும் அளவு ஊறவைத்து 10 மணி நேரம் கழித்து அந்த நீரை வடித்து
வைக்கவும். சுத்தமான வெள்ளைத்துணியில் வடிகட்டிய ராகியை வெள்ளைதுணியில் போட்டு இலேசாக
இறுக்கமாக கட்டி விடவும். 3 நாட்களில் முளை கட்டி இருக்கும். முளைகட்டியை கேழ்வரகை அகலமான
தட்டில் கொட்டி அதன் ஈரம் போக காயவிடுங்கள். நன்றாக காய்ந்ததும் பவுடர் தயாரிக்கலாம்.
முளைகட்டிய ராகியை வாணலியில் சேர்த்து வறுக்கவும். அதன் வாசனை போகும் வரை வறுத்து சூடு ஆற தட்டில் கொட்டவும். பிறகு மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு கட்டியில்லாமல் அரைக்கவும். கட்டியில்லாமல் அரைத்து அகலமான தட்டில் கொட்டி அதில் கொகோபவுடர், பால் பவுடர் இரண்டையும் கலந்து கொள்ளவும். பிறகு சிறிது அளவு அதில் நாட்டுசர்க்கரை கலந்துகொள்ளவும்.
இந்த பவுடரை ஒரு மாதத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பதால் அவ்வபோது தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைக்கு கொடுக்கும் போது வெந்ந்ரீலும் கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு வேளை கொடுத்தாலே போதுமானது. பயணங்களின் போதும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்து நிறைந்த பவுடர் இது.
RAGI, FOOD BLOG, HEALTH TIPS, RAGI HEALTH TIPS
No comments:
Post a Comment