Wednesday, December 1, 2021

பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி?

பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி?
  • நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று
    நரம்புகள் சுருண்டு குடைச்சல் தருவதை நரம்பு சுருட்டல் அல்லது நரம்புசுளிவு (varicosis veins) என்கிறோம்.

  • இதனை கவனிக்காமல் விட்டால் இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து
    மைலாடி ஆயுர்வேத மருத்துவர் பிரிசில்லா சாரோன் இஸ்ரேல் கூறுவதை பார்ப்போம்.

  • பொதுவாக இடுப்பிற்கு கீழ் தொடையின் பின்புறமாக கீழ் நோக்கி பாதம் வரைக்கும்
    சிலந்தி வலை தோற்றம் போன்று காணப்படும். பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் பெரிதாகவும்,
    தடிமனுடனும், அதிக வளைவுடனும் தனித்து தென்படும்..

  • பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய் இயல்பாக ரத்தத்தின் வேகம் குறைந்தும் மேல் நோக்கி
    நகர்ந்து போக முடியாத நிலையும் அங்கேயே தங்கி பல பிரச்னைகளை ஏற்படுத்தும்..

  • 10 முதல் 20 சதவீத மக்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வெளியில் காட்டாத சிறிய நிலையிலும்,
    சிலருக்கு எளிதில் வெளியில் தெரியும் நிலையிலும் உள்ளது..

  • குறிப்பாக 30 முதல் 70 வயதினரிடையே இந்நோய் தாக்கம் அதிகம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் உள்ளது..

  • தற்போதைய ஆராய்ச்சியில் பாதிப்பிற்குள்ளான 50 சதவீத மக்களிடம் பாரம்பரியமாக
    இந்நோய் இருப்பதாக கூறுகிறார்கள். நமது கால்களில் ரத்த ஓட்டம் சீராக ஓடாமல் இருப்பதால் ஏற்படுகிறது..

  • அதுமட்டும் இல்லாமல் ரத்தகுழாய்களில் உள்ள வால்வுகளின் செயல்பாடுகளில் தளர்ச்சி மிகுதியால்
    ரத்தம் பின்நோக்கி சென்று ஒரே இடத்தில்
    அதிலும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டு தென்படும்..

  • இதனையே வெரிக்கோசிஸ்வெயின் என்கிறோம். பொதுவாக செக்யூரிட்டி நபர்கள்,
    தள்ளுவண்டி ஓட்டுநர், போர் வீரர்கள், துணி துவைப்பவர்கள், ஓட்டுநர் போன்றவர்களையும்,
    அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களையும் பாதிக்கிறது..

  • காரணங்கள்: அதிக நேரம் நிற்பது, நடப்பது, உட்காருவது, அதிக உடல் எடை,
    கர்ப்பகாலத்தில் வருவது பிரசவத்திற்கு பின்னர் இருப்பது இல்லை..

  • ரத்தநாளங்களில் உள்ள வால்வுகள் செயல் இழப்பதாலும், ரத்த குழாய் மெல்லியதாகி
    தளதளஎன ஆகிவிடுகிறது. வெட்டுகாயம், அடிபட்டாலும் வரலாம்..

  • அறிகுறி: இடுப்பிற்கு கீழ் ஒன்றுக்கு அதிகமான நரம்புகள் சுருண்டும், வீங்கியும் சிலந்தி கூடு போன்று தென்படும்.
    சில சமயம் இரவுநேரம் வலி வீக்கம், பாதம் மரத்து போகும் நிலை ஏற்படுகிறது..

  • நோய் முற்றிய நிலையில் குழாய் வெடித்து உள்ளேயே ரத்தம் வெளியேறிகொண்டு இருக்கும்.
    சில சமயம் (eczema) மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படும்..

  • கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால் வால்வுகளில் கோளாறு இருப்பதாக கருதலாம். நோயினால் வரும்.

  • பிரச்னைகள்: தோலுக்கடியில் உள்ள ரத்த நாளங்களில் வலி. தோல் சிவந்து காணப்படும். இதற்கு காரணம்
    ரத்தம் உறைந்து கட்டி ஆவதே. உள்ளேயே ரத்தநாளம் உடைந்து உள்ளேயே கட்டி
    நின்று தீரா காரணங்களையும் ஏற்படுத்தி விடும்..

  • டிவிடி (deepveinthromfosis) என அழைக்கப்படும் சிறிய ரத்த உறைவுகள் பல ரத்த குழாய்களின்
    உள் ஒட்டி கொண்டு இருக்கும். இது ரத்தத்தோடு மேல் நோக்கி போய் இருதயம் மற்றும்
    மூளையில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதனை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உதவியுடன் கண்டறியலாம்..

  • சிகிச்சை: ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் கால்களில், பெருந்தொடையில் இருந்து சிறு தொடை வரை நீளகால் உறை அணிவதன் மூலம் குணம்கிடைக்கிறது..

  • ரத்த குழாய் சிலந்தி வலை போன்று காணப்பட்டால் மைக்ரோஸ்கிளிரோதெரபி எனும்
    அறுவை சிகிச்சை மூலமும், லேசர், ஆம்புலேட்டரி பிளப்பக்டமி மூலம் குழாய்களை வெட்டி அகற்றியும்,
    சிகிச்சை மூலம் பலன்பெறலாம்..

  • ஆயுர்வேத சிகிச்சை: தோல் மருந்துகளான மஞ்சள். சுக்கு, பெருங்காயம், மிளகு, அந்தி மந்தாரை, வெண்தேக்கு, திப்பிலி, சகச்சரம், சிறுவில்வம்,
    புங்கை, குகுலு, மூக்கிரட்டை, கொடுவேலி, மாவிலங்கம், வாய்விடங்கம், வில்வம், நெருஞ்சிள், திரிபலா, பூண்டு, நன்னாரி, சீந்தில், தசமூலம், அக்கினிமந்தை, மூங்கில் உப்பு, இந்துப்பு
    போன்றவை நல்ல பயன்களை தருகிறது
    ரத்தத்தை வெளியில் எடுக்கும் ரத்தமோட்சணம் மற்றும் வஸ்தி போன்ற சிகிச்சை சிறந்தது..

  • தவிர்ப்பு முறை: அதிக நேரம்நிற்ககூடாது. இருக்கவும் கூடாது. சீரான உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாகவும், உடல் எடையை குறைத்தும், உயர்ந்த காலனிகளை தவிர்க்கவேண்டும். இறுகிய உடை அணிவதையும் தவிர்க்க வேண்டும்..

  • ஒரு நாள் ஒரு முறையேனும் கால்களை இருதய மட்டத்திற்கு மேல் வைக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் நீண்ட கால் உறைகளை அணிவதன் மூலம் வீக்கம், வலியை தவிர்க்கலாம்.
    தயிர், வறுத்த, பொறித்த, துரித, குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்..

  • வீட்டு வைத்தியம்: வசம்பு, மஞ்சள், துளசி, சமபங்கு எடுத்து சோற்றுக் கற்றாளையில் அரைத்து பூசலாம். இரண்டு மணி நேரம் உலர விட்டு 20 நாள் வரை செய்ய வேண்டும்..

  • புங்கன் விதை மற்றும் ஆமணக்கு எண்ணெய் 10 மில்லி உடன் 5 மில்லி தேன் சேர்த்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். வலி வீக்கம் இருந்தால் பனிக்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்..

Visit https://www.maalaimalar.com/amp/

Tuesday, November 30, 2021

சிறுவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளை எப்படிக் கண்டறிவது?

எடையை குறைக்க உதவும் வீகன் உணவுமுறை

Adversidements


Sunday, November 28, 2021

ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக

ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக


  • ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக பலா பிஞ்சினை சமைத்து உண்ண ஆண்மை அதிகரிக்கும்

  • சுரைக்காயை சமைத்து சாப்பிட்டுவந்தால் ஆண்மை அதிகரிக்கும்
    சுரைக்காய் விதைகள் ஆண்மையை பெருக்கும் குணம் உள்ளது.

  • ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுது, விதைகள், இவற்றிற்ல் ஏதேனும் ஒன்றை
    அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.

  • அரச விதையை பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
    பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகி கரு நல்ல முறையில் வளரும்

  • முருங்கைக் கீரை : முருங்கை காய், முருங்கை பிசின் என அனைத்துமே ஆண்மையை பெருக்கும் உணவாக உள்ளது.
    முருங்கை கீரையை பொரியல் செய்து அதனை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து
    உண்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.
    குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்

  • ஓரிதழ் தாமரை ஆண்மையை பெருக்கும் ஒரு அற்புத மூலிகை.
    ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
    இந்த சூரணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில்
    ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு
    , பின்னர் ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
    தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால்
    இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம்.
    ஆண்மை குறைவு காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்

Friday, July 2, 2021

இயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்

இயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்...!
கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தால், அழகான பெண்களைக் கூட அவலட்சணமாக்கிக் காட்டும். இதைப் போக்க, தேங்காய் எண்ணெயில் மஞ்சள்பொடி கலந்து குழைத்து, அதை வெதுவெதுப்பாகச் சுடவைத்துத் தினமும் குளிப்பதற்கு முன் கண்களைச் சுற்றி பூசி வைத்திருந்து, பத்து நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.

நகத்தைப் பராமரிக்க:

நகம்

நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள் அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.

காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும், வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

நகத்தைப் பராமரிக்க:

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

இதழ்களை பராமரிக்க:



நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலேசாக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்

முகத்தைப் பராமரிக்க:

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள் செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

கழுத்தை பராமரிக்க: :


சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க:



ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

கருவளையம் நீங்க:



கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.

கருப்பு திட்டுகளை நீக்க:



சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

இயற்கை கிளென்சர்:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.
இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.

வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

முகப்பரு போக்க:



ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள். காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம்.

இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

மற்றொரு முறை:
வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.

முடிவாக

மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால்

முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.



Wednesday, June 30, 2021

குழந்தைகளுக்கு பார்லி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

குழந்தைகளுக்கு பார்லி - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
உங்கள் குழந்தைக்கு உணவு தயாரிக்கும் போது, உங்கள் குழந்தை திடப்பொருட்களை எடுக்கத் தொடங்கியிருந்தால், பார்லி ஒரு சரியான உணவு!வீட்டில் பார்லி குழந்தை தானியமானது மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. பல குழந்தை மருத்துவர்கள் முதலில் அரிசி தானியங்களை கொடுக்க பரிந்துரைக்கின்றனர்; உங்கள் குழந்தை அரிசியை பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால் நீங்கள் பார்லியைத் தொடங்கலாம்.

பார்லியை தானியமாக மாற்றலாம், நீங்கள் அதை குண்டுகள், சூப்கள் மற்றும் ப்யூரிட் பிலாஃப் ஆகியவற்றில் சேர்க்கலாம். விரும்பிய நிலைத்தன்மையைப் பெற நீங்கள் பார்லியை சூப்களுடன் எளிதாகக் கலக்கலாம் மற்றும் உங்கள் குழந்தை ஆரோக்கியமான நன்மையை அனுபவிக்கட்டும்

உங்கள் குழந்தைக்கு பார்லியின் நன்மை:
இந்த நாட்களில் பார்லி ஒரு பொதுவான உணவு அல்ல என்றாலும், இயற்கையாகவே கிடைக்கும் மிகவும் சத்தான தானியங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் ஏராளமான நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், இரும்பு, தாமிரம், பி வைட்டமின்கள், மாங்கனீசு, இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. ஒரு கப் சமைத்த பார்லி பின்வரும் ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது:

  1. புரதம் - 3.55 கிராம்
  2. வைட்டமின் ஏ - 11 ஐ.யூ.
  3. வைட்டமின் சி - 0 மி.கி.
  4. தியாமின் - 0.13 மி.கி.
  5. ரிபோஃப்ளேவின் - 0.09 மி.கி.
  6. நியாசின் - 3.23 மி.கி.
  7. ஃபோலேட் - 25 எம்.சி.ஜி.
  8. பிற வைட்டமின்களின் அளவைக் கண்டறியவும்
  9. பாஸ்பரஸ் - 85 மி.கி.
  10. பொட்டாசியம் - 146 மி.கி.
  11. கால்சியம் - 17 மி.கி.
  12. மெக்னீசியம் - 35 மி.கி.
  13. இரும்பு - 2.09 மி.கி.
  14. சோடியம் - 5 மி.கி
  15. .


[குழந்தைகளுக்கு காலை உணவு சமையல் ]

உங்கள் குழந்தை எப்போது பார்லியை சாப்பிட முடியும்?
பார்லியில் பசையம் உள்ளது என்று அறியப்படுவதால், அதன் மெல்லிய அமைப்பைக் கொடுக்கும் புரதம் (கோதுமை மற்றும் கம்பு போன்றவற்றிலும் காணப்படுகிறது), பல நிபுணர்கள் இதை 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு பார்லியின் ஆரோக்கிய நன்மைகள்:

பார்லி உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்யும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். உங்கள் குழந்தைக்கு பார்லியை வழங்குவதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய நன்மைகள் பின்வருமாறு:

1. டயட் ஃபைபர்:
பார்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது. இது இலவச குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது, எனவே, உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கிறது.

2. எலும்புகளை பலப்படுத்துகிறது:
பார்லியில் அதிக அளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளது. கால்சியத்தைத் தவிர எலும்புகளை வலுப்படுத்துவதில் பாஸ்பரஸும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் குழந்தையின் வலுவான எலும்புகளுக்கு, நீங்கள் பார்லியை அவர்களின் உணவில் சேர்க்க வேண்டும்.

3. கல்லீரலை பலப்படுத்துகிறது:
பார்லி கல்லீரலைப் பாதுகாப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தானியத்தை உணவில் சேர்ப்பது கல்லீரலை சேதத்திற்கு எதிராக பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க விளைவைக் காட்டுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. பூஞ்சை எதிர்ப்பு நடவடிக்கை:
பார்லி விதைகள் உடலில் ஏற்படும் எந்த பூஞ்சை தாக்குதல்களுக்கும் எதிராக செயல்படுகின்றன. அவை புரோந்தோசயனிடின்கள், பிஃப்ளவோன்கள், கிரிஸீரியல்கள் போன்ற சில உயிர்வேதியியல் பொருட்களைக் கொண்டுள்ளன, அவை பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

[ திட உணவை எவ்வாறு அறிமுகப்படுத்துவது ]

குழந்தைகளுக்கு பார்லி தானியத்தை எப்படி சமைக்க வேண்டும்?

பார்லி தயாரிக்க எளிதானது மற்றும் அதிக நேரம் எடுக்காது. மன அழுத்தம் நிறைந்த கால கட்டத்தில் கூட இதை விரைவாக தேர்வு செய்யலாம். பார்லி சமைப்பதற்கான எளிதான வழி ஒரு கப் பார்லி விதைகளை 3 கப் தண்ணீரில் கொதிக்க வைப்பது. தண்ணீரை கொதிக்க வைக்கவும், பார்லி விதைகளை சேர்த்து மீண்டும் வேகவைக்கவும்.

நீங்கள் முத்து பார்லியைத் தேர்வுசெய்தால், அதற்கு குறைந்த தண்ணீர் தேவைப்படுகிறது மற்றும் சமைக்க 40 நிமிடங்கள் ஆகும். பானை (மெருகூட்டப்பட்ட) பார்லிக்கு, இது ஒரு மணிநேரம் ஆகலாம் மற்றும் பார்லி பார்லி கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரம் ஆகும்.

பார்லியை வேகமாகவும் எளிதாகவும் சமைக்க

நீங்கள் முதலில் பார்லியை ஊற வைக்க வேண்டும். நீண்ட நேரம் ஊறவைப்பது ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சக்கூடியதாக ஆக்குகிறது, மேலும் அவற்றின் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

ஒரு பாத்திரத்தில் பார்லியை எடுத்து, அதை சரியாக கழுவி, விதைகளை மறைக்கும் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும். ஒரே இரவில் விட்டுவிட்டு, மறுநாள் காலையில் வடிகட்டி, ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதால் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள், இதை சூப்கள், பருப்புகள் மற்றும் மாவை பிசைவதற்கு கூட பயன்படுத்தலாம்.

நீங்கள் அவற்றை சுமார் 2 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம் மற்றும் நீங்கள் விரும்பும் போதெல்லாம் சமைக்கலாம்.

1. குழந்தைகளுக்கு பார்லி ஆப்பிள் கஞ்சி:

பார்லி ஆப்பிள் கஞ்சி தயாரிக்க உங்களுக்கு முழு பார்லி, ஆப்பிள் மற்றும் தண்ணீர் தேவை. இது உங்கள் குழந்தைக்கு அறிமுகப்படுத்த சிறந்த திட உணவாக இருக்கலாம்.

அதை எப்படி சமைப்பது எப்படி என்பதை காண்போம் :

பிரஷர் குக்கரில் ஒரு கப் பார்லி மற்றும் 3 கப் தண்ணீரை சேர்த்து முதலில் பார்லியை சமைக்கவும். 5 விசில்களுக்கு சமைக்கவும், பின்னர் சுமார் 15 - 20 நிமிடங்கள் இளங்கொதிவாக்கவும்.
நீராவி தானாகவே சென்று பார்லி சரியாக சமைக்கப்படுகிறதா என்று சரிபார்க்கவும்.
நறுக்கிய ஆப்பிள்கள், 1/2 கப் தண்ணீர் சேர்த்து இப்போது சுமார் 2 நிமிடங்கள் சமைக்கவும்.
கலவையை மென்மையாக மாறும் வரை ஒரு பிளெண்டரில் ப்யூரி செய்யவும்.
கஞ்சியை ஒரு பாத்திரத்தில் எடுத்து உங்கள் செல்ல குழந்தைகளுக்கு கொடுக்கவும்

. பார்லி மற்றும் உருளைக்கிழங்கு உருண்டைகள்

பார்லி ஒரு அற்புதம் மற்றும் நட்டு சுவை கொண்டது,
இது நம்பமுடியாத பல்துறை மற்றும் வெவ்வேறு வழிகளில் எடுக்கப்படலாம்.
உங்களுக்கு மென்மையான முத்து பார்லி (1 கப்), ஆப்பிள் சாஸ், இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய், இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி தேவை.

அதை எப்படி சமைப்பது எப்படி என்பதை காண்போம்

ஒரு பாத்திரத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து டாஸ் செய்யவும்.
நீங்கள் இதை சிற்றுண்டி அல்லது உணவோடு பரிமாறலாம்.

பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி?

பெண்களை பாதிக்கும் நரம்பு சுருட்டல் - கட்டுப்படுத்துவது எப்படி? நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் சிலந்தி வலை போன்று நரம்புக...